படிக்காத பாமரனே!
பார்புகழும் மேதையே!
பசியோடு வந்த பள்ளிக்
குழந்தைகளின்
பசிப்பிணித் தீர்த்த
பண்பின் பிறப்பிடமே
பாரதத்தைக் காத்திட
மீண்டும் பிறந்து வா!
உழைத்திடும் உழவன்
வாழ்வு உயர்ந்திட
உயர்ந்த அணைகள்
உருவாக்கிய உத்தமரே!
வாடும் உழவர்களின்
வறுமையைத் தீர்க்க
விருதுபட்டியில் பிறந்த
வள்ளலாரே விரைந்து வா!
சத்தியமூர்த்தியின் சீடரே!
சத்தியம் காத்த சீலரே!
ஆசியஜோதியின் அருமை
நண்பரே- அன்னை
இந்திராவைப் பிரமர்
ஆக்கிய சாணக்கியரே
மனிதருள் புனிதரே
மறுபடியும் பிறந்து வா!
காத்திருக்கிறேன்
R.மதகை பிரபு நாடார்
பாரதத்தை காதலித்த
தன்மான தலைவனே
‘விருது’ நகர் கண்டெடுத்த
பச்சைத் தமிழனே
படித்திடாத மேதையென்று
வரலாற்றில் பெயரெடுத்தவனே
கல்வி பயில்வோர்க்கு
பாலமாய் இருந்தவனே
சிறைபுகுந்நு தேசசேவை
செய்த மாவீரனே
கறைபடியாத அரசியலை
செய்த முதல்வனே
காந்தி மகான்வழியில்
புரட்சிகள் செய்தவனே
பதராடை போல
மனம் உடையவனே
தமிழகம் கண்டெடுத்த
இன்னொரு மகாத்மாவே
நீ வருவாய் என
காத்திருக்கிறேன்
பெருந்தலைவா!
பேரன்புத் தவச் செல்வா
R.மதகை பிரபு நாடார்
விருதுநகர் வீதியிலே
தமுக்கடித்து
வீரத்தாய்த் திருநாட்டின்
புகழ் படித்து
‘வருதுங்க சுதந்திரமே
இந்த நாட்டில்
வாழ்கின்ற எல்லோரும்
உரிமையோடு
பெருகிவரும் இன்பங்கள்
அனுபவிக்கப்
பேரார்வம் கொண்டறப்போர்
முனைக்கு வாங்க
கருணைமகான் காந்திவழி
நடந்து நாமும்
காண்போமே முழுவெற்றி
என்ற வீரர்,
ஆயிரத்துத் தொளாயிரத்தி
இருபதாண்டில்
அன்னைநாட்டின் சேவைக்குத்
தன்னைச்சேர்த்து
மாபெரிய ‘ஹோம்ரூல்’ இயக்கம்
கண்டார்,
மனம் கொதித்தார் பஞ்சாபில்
கொலையைக்கண்டு!
தாய்நாட்டில் நாகபுரிக்
கொடி போராட்டம்
தன்மானம் காத்திடகள்
கடைமுன் மறியல்!
ஓயாத ஜஸ்டிஸார்
மருளும் வண்ணம்
உடன் கொண்டார்
ஆவேச விஸ்வரூபம்!
காலனாம் நீலம்சிலை
அகற்றும் போரில்!
கைதானார் உப்பெடுக்கும்
போராட்டத்தில்!
வாளொத்த கொடியவர்க்கும்
பதில்கொடுத்தார்
வந்தனைகள் செய்து
மக்கள் தொண்டும் செய்தார்
கோலோச்ச வந்தவெள்ளை
வைசிராய்க்குக்
குலைநடுக்கம் தந்துசிறை
வாசம்பெற்றார்!
பாலொத்த மனம்கொண்ட
வீரரைத் தன்
பக்கத்தில் அமர்த்தினார்
சத்யமூர்த்தி!
சேலத்து ‘வியாசரு’க்கும்
இவருக்கும் சற்று
சிந்தையின் பேதத்தால்
மிக உயர்ந்தார்!
காலத்தை மிக அளந்து
கணக்குப் பார்த்தார்
காங்கிரஸில் ஓங்குபுகழ்
பெருமை பெற்றார்!
ஊழலோ லஞ்சமோ
எதுவும் இல்லா
உண்மையான ரமராஜ்யப்
பெருமையோடு
ஆளலாம் தேசத்தை
என்று ஒன்பது
ஆண்டுகாலம் தமிழகத்தைக்
கட்டி ஆண்டார்!
கட்சிகளில் மிகுஉயர்ந்த
கட்சியாகி
காலத்தால் நீடுபுகழ்
கொண்ட காங்கிரஸ்
கட்சியின் அகில
இந்தியத் தலைவராக்க்
காட்டியமா திறமைக்கு
உவமையேது?
துச்சமெனப் பதவிகளை
நினைத்த தியாகத்
தூயவரை நேருபிரான்
புகழ்ந்து வாழ்த்த
அச்சமின்றிப் புதுக்கொள்கை
பல வகுத்து
ஆழிசூழ் உலகுபுகழ்
பெற்ற வீரர்!
நேருவுக்குப் பின்இங்கு
யார்தான் என்ற
நெருக்கடியை நொடிப்பொழுதில்
தீர்த்துவைத்து
ஊருக்குள் உலகத்துள்
உள்ள நல்ல
உத்தமர்தம் இதயத்துள்
குடிபுகுந்து
யாருக்கும் பொதுவான
தலைவரான
இனியவராம் விருதைநகர்
வீர்ர் என்ற
பேருக்கு இலக்கான
காமராஜர்
பிறந்த நாளில்
மனந்திறந்து பேசுகின்றோம்!
பெருந்தலைமைப் பதவிகளை
உதறிவிட்டுப்
பிறந்தாய்த் திருநாட்டின்
உயர்வுக்காக
அருந்தொண்டு செய்தபடி
ஏழைநெஞ்சின்
ஆசைகளை நிறைவேற்றி
வைத்த எங்கள்
பெருந்தலைவா! சிவகாமி
அன்னை பெற்ற
பேரன்புத் தவச்செல்வா!
நாட்டைநோக்கி
வருந்துன்ப இன்னல்களைத்
தீர்க்கும் நல்ல
வழிமுறைகள் காணுங்கள்
குரல்கொடுங்கள்!
காமராஜர் வழி நடக்கும்
மதகைபிரபு நாடார்
பார்புகழும் மேதையே!
பசியோடு வந்த பள்ளிக்
குழந்தைகளின்
பசிப்பிணித் தீர்த்த
பண்பின் பிறப்பிடமே
பாரதத்தைக் காத்திட
மீண்டும் பிறந்து வா!
உழைத்திடும் உழவன்
வாழ்வு உயர்ந்திட
உயர்ந்த அணைகள்
உருவாக்கிய உத்தமரே!
வாடும் உழவர்களின்
வறுமையைத் தீர்க்க
விருதுபட்டியில் பிறந்த
வள்ளலாரே விரைந்து வா!
சத்தியமூர்த்தியின் சீடரே!
சத்தியம் காத்த சீலரே!
ஆசியஜோதியின் அருமை
நண்பரே- அன்னை
இந்திராவைப் பிரமர்
ஆக்கிய சாணக்கியரே
மனிதருள் புனிதரே
மறுபடியும் பிறந்து வா!
காத்திருக்கிறேன்
R.மதகை பிரபு நாடார்
பாரதத்தை காதலித்த
தன்மான தலைவனே
‘விருது’ நகர் கண்டெடுத்த
பச்சைத் தமிழனே
படித்திடாத மேதையென்று
வரலாற்றில் பெயரெடுத்தவனே
கல்வி பயில்வோர்க்கு
பாலமாய் இருந்தவனே
சிறைபுகுந்நு தேசசேவை
செய்த மாவீரனே
கறைபடியாத அரசியலை
செய்த முதல்வனே
காந்தி மகான்வழியில்
புரட்சிகள் செய்தவனே
பதராடை போல
மனம் உடையவனே
தமிழகம் கண்டெடுத்த
இன்னொரு மகாத்மாவே
நீ வருவாய் என
காத்திருக்கிறேன்
பெருந்தலைவா!
பேரன்புத் தவச் செல்வா
R.மதகை பிரபு நாடார்
விருதுநகர் வீதியிலே
தமுக்கடித்து
வீரத்தாய்த் திருநாட்டின்
புகழ் படித்து
‘வருதுங்க சுதந்திரமே
இந்த நாட்டில்
வாழ்கின்ற எல்லோரும்
உரிமையோடு
பெருகிவரும் இன்பங்கள்
அனுபவிக்கப்
பேரார்வம் கொண்டறப்போர்
முனைக்கு வாங்க
கருணைமகான் காந்திவழி
நடந்து நாமும்
காண்போமே முழுவெற்றி
என்ற வீரர்,
ஆயிரத்துத் தொளாயிரத்தி
இருபதாண்டில்
அன்னைநாட்டின் சேவைக்குத்
தன்னைச்சேர்த்து
மாபெரிய ‘ஹோம்ரூல்’ இயக்கம்
கண்டார்,
மனம் கொதித்தார் பஞ்சாபில்
கொலையைக்கண்டு!
தாய்நாட்டில் நாகபுரிக்
கொடி போராட்டம்
தன்மானம் காத்திடகள்
கடைமுன் மறியல்!
ஓயாத ஜஸ்டிஸார்
மருளும் வண்ணம்
உடன் கொண்டார்
ஆவேச விஸ்வரூபம்!
காலனாம் நீலம்சிலை
அகற்றும் போரில்!
கைதானார் உப்பெடுக்கும்
போராட்டத்தில்!
வாளொத்த கொடியவர்க்கும்
பதில்கொடுத்தார்
வந்தனைகள் செய்து
மக்கள் தொண்டும் செய்தார்
கோலோச்ச வந்தவெள்ளை
வைசிராய்க்குக்
குலைநடுக்கம் தந்துசிறை
வாசம்பெற்றார்!
பாலொத்த மனம்கொண்ட
வீரரைத் தன்
பக்கத்தில் அமர்த்தினார்
சத்யமூர்த்தி!
சேலத்து ‘வியாசரு’க்கும்
இவருக்கும் சற்று
சிந்தையின் பேதத்தால்
மிக உயர்ந்தார்!
காலத்தை மிக அளந்து
கணக்குப் பார்த்தார்
காங்கிரஸில் ஓங்குபுகழ்
பெருமை பெற்றார்!
ஊழலோ லஞ்சமோ
எதுவும் இல்லா
உண்மையான ரமராஜ்யப்
பெருமையோடு
ஆளலாம் தேசத்தை
என்று ஒன்பது
ஆண்டுகாலம் தமிழகத்தைக்
கட்டி ஆண்டார்!
கட்சிகளில் மிகுஉயர்ந்த
கட்சியாகி
காலத்தால் நீடுபுகழ்
கொண்ட காங்கிரஸ்
கட்சியின் அகில
இந்தியத் தலைவராக்க்
காட்டியமா திறமைக்கு
உவமையேது?
துச்சமெனப் பதவிகளை
நினைத்த தியாகத்
தூயவரை நேருபிரான்
புகழ்ந்து வாழ்த்த
அச்சமின்றிப் புதுக்கொள்கை
பல வகுத்து
ஆழிசூழ் உலகுபுகழ்
பெற்ற வீரர்!
நேருவுக்குப் பின்இங்கு
யார்தான் என்ற
நெருக்கடியை நொடிப்பொழுதில்
தீர்த்துவைத்து
ஊருக்குள் உலகத்துள்
உள்ள நல்ல
உத்தமர்தம் இதயத்துள்
குடிபுகுந்து
யாருக்கும் பொதுவான
தலைவரான
இனியவராம் விருதைநகர்
வீர்ர் என்ற
பேருக்கு இலக்கான
காமராஜர்
பிறந்த நாளில்
மனந்திறந்து பேசுகின்றோம்!
பெருந்தலைமைப் பதவிகளை
உதறிவிட்டுப்
பிறந்தாய்த் திருநாட்டின்
உயர்வுக்காக
அருந்தொண்டு செய்தபடி
ஏழைநெஞ்சின்
ஆசைகளை நிறைவேற்றி
வைத்த எங்கள்
பெருந்தலைவா! சிவகாமி
அன்னை பெற்ற
பேரன்புத் தவச்செல்வா!
நாட்டைநோக்கி
வருந்துன்ப இன்னல்களைத்
தீர்க்கும் நல்ல
வழிமுறைகள் காணுங்கள்
குரல்கொடுங்கள்!
காமராஜர் வழி நடக்கும்
மதகைபிரபு நாடார்
No comments:
Post a Comment