Thursday, July 3, 2014

நம்ம இதயம் முத்து அண்ணாச்சி

நம்ம இதயம் முத்து அண்ணாச்சி 
https://www.facebook.com/ulaippaluyarnthanadargal/photos/a.1401940643401957.1073741828.1401938560068832/1439480216314666/?type=1&theater

விருதுநகர் பிரபல வணிகர் உயர்திரு .வி.வி.வி.ராஜேந்திரன் -ஜெகதாம்பாள் தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி பிறந்தவர் திரு. வி.ஆர். முத்து அவர்கள் .திரு. முத்து அவர்கள் தனது ஆரம்ப பள்ளிக்கல்வியை விருதுநகர் சுப்பிரமணிய வித்தியாசாலாவிலும் ,பின்னர் திருவள்ளுவர் வித்தியாசாலாவிலும் பயின்றார்.உயர்நிலைப் பள்ளி படிப்பை மதுரை ரோடு சத்திரியா வித்தியாசாலாவிலும் பயின்றார்.பட்ட படிப்பை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார்.மும்பை எம்.எம்.கே வணிகக் கல்லூரியில் b .com படித்தார்.பின் சென்னை பிரபல ஆடிட்டர் கே.வி. ராமசாமி அவர்களிடம் பயிற்சி பெற்றார்.இம் மூன்றாண்டு காலத்தில் சென்னை மற்றும் பெருநகரங்களில் செயல் படும் பெரும் வணிக நிறுவனங்களில் உள்ள தணிக்கை மேற்க் கொண்டதன் மூலமாக வணிக நிர்வாகம் பற்றிய உயர் சிந்தனைகளைப் பெற்றார்.
1978 ஆம் ஆண்டு தங்கள் குடும்ப வணிக நிறுவனமான' ஆனந்தம் நல்லெண்ணெய்' வணிகத்தில் சேர்ந்தார். 1978 ஆம் ஆண்டு டாக்டர் திரு..எஸ். காசிராஜன்-மனோன்மணி தம்பதிகளின் புதல்வி மலர்விழி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.திரு. முத்து -மலர்விழி தம்பதியினருக்கு திருமதி.பூவிதழ் B .E ,டாக்டர் .திருமதி .இளந்தளிர் MBBS .,D .Diab ஆகிய இரு மகள்களும் திரு.ராஜா விக்னேஷ் முத்து B .TECH ., M .BA ., ஆகிய மகனும் உள்ளனர்.
1978 ஆம் ஆண்டு முத்து அவர்கள் வணிகத்திற்கு வந்த புதிதில் அக்கௌண்டிங்கில் ஆர்வம் கட்டி வந்தார்.மார்கெட்டிங் தான் ஒரு வணிக நிறுவனத்தின் முக்கிய பணி என்ற தெளிவு ஏற்ப்பட்டு 1980 ல் தன முழுக் கவனத்தையும் மார்கெட்டிங்கில் செலுத்த ஆரம்பித்தார்.1980 ஆம் ஆண்டு ஆனந்தம் நல்லெண்ணெய் ராமநாத புரம், மதுரை , திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சென்னை நகரிலும் மட்டுமே விற்பனை செய்து வந்தது .திரு. முத்து அவர்கள் தமிழகம் முழுவதும் தம் விற்ப்பனையை சந்தைப் படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்றி ஆறு ஆண்டுகளில் ஆனந்தம் நல்லெண்ணெய் விற்ப்பனையை ஆறு மடங்காக மாற்றினார்.1980 ல் இரண்டு கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை ஆன ஆனந்தம் நல்லெண்ணெய் 1986 ல் ரூபாய் பன்னிரண்டு கோடிக்கு விற்ப்பனையை எட்டியது
1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி 'இதயம்' என்ற புதிய பிராண்ட் நல்லெண்ணெய் உதயமானது .1980 ஆம் ஆண்டு வணிகத்தில் நுழைந்த பொழுது பிறருடன் பேச தயக்கம் காட்டும்திரு முத்து அவர்கள் jayces பயிற்சி மூலம் தன்னை மேலும் மேலும் பட்டை தீட்டிக் கொண்டார்.தலைமைப் பண்புகளும் , உற்சாகமும் , பயிற்சிகள் மூலம் ஆக்க பூர்வமான மாற்றங்களை ஏற்ப்படுத்தும் என்பதை உணர்ந்த திரு. முத்து அவர்கள் இதயம் நிறுவன மேலாளர்களுக்கும் , இடைநிலைப் பணியாளர்களுக்கும் பலவித சுய முன்னேற்ற பயிற்சிகளை வழங்கி இதயம் நிறுவனத்தை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்றார்.
ஆறு கோடி ரூபாய் விற்பனையில் ஆரம்பித்த இதயம் நிறுவனம் 27 ஆண்டுகளில் பல தயாரிப்புகளை நிர்வகித்து ஆண்டுக்கு 360 கோடி ரூபாய் விற்பனையை எட்டி உள்ளது .இன்று உலக அளவில் 'இதயம் நல்லெண்ணெய் மற்றும் இதயம் குழுமப் பொருட்கள் சந்தைப் படுத்தப் படுகின்றன .வெகு விரைவில் 500 கோடி ரூபாய் விற்பனை இலக்கை எட்ட வேண்டும் என்ற உற்சாகத்துடன் இதயம் குழுமம் வீர நடை போடுகிறது.
1993 ஆம் ஆண்டு இந்திய ஜேய்செஸ் இயக்கம் தேசிய அளவில் வழங்கிடும் மதிப்பு மிக்க சிறந்த தொழில் சாதனையாளருக்கான "கமல் பத்ரா'விருதை வழங்கி கௌரவப் படுத்தியது .
2007 ஆம் ஆண்டு , இந்தியாவின் தலை சிறந்த வணிக சாதனையாளராக திரு.முத்து அவர்கள் தேர்வு செய்யப் பட்டு , ஜூனியர் சாம்பர் இன்டர்நேஷனல் அமைப்பின் உயரிய விருதான "TOBIP " விருது பெற்றார்
திரு.முத்து அவர்கள் பாரதத்தின் தலை சிறந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் பெயரால் மத்திய அரசு ஏற்ப்படுத்தியுள்ள ஆராய்ச்சி அறக்கட்டளை என்னும் அமைப்பால் 'எள் விவசாயிகளின் பாது காவலர் 'என்னும் பட்டம் அளிக்கப் பட்டு பெருமைப்படுத்தப் பட்டுள்ளார்.
இவ்வாறு பன்முக திறமைகளும் பாரம்பரிய பண்பாடுகளும் பக்குவமான சிந்தனைகளும் , ஆக்கபூர்வமான அணுகுமுறையும் , அன்பு கனிந்த ஆர்வம் நிறைந்த கொடையுள்ளமும் , பாராட்டும் பெருங்குணமும் ,குறை கொண்டோரிடத்தும் நிறை கண்டு பழகும் பாங்கும் ,பயிற்சியில் நம்பிக்கையும் முயற்சியில் முனைப்பும் ,புதுமையில் நாட்டமும் , வாழ்க்கை முறையில் எளிமையும் வணிக நெறியில் நேர்மையும் கொண்டு விளங்கும் திரு.இதயம் முத்து அண்ணாச்சி அவர்களை நம் "உழைப்பால் உயர்ந்த நாடார்" பக்கம் வாழ்த்துகிறது

Wednesday, November 27, 2013

நாடார்களின் மீது தெலுங்கர்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறை

தமிழகத்தைபொறுத்த அளவில் ஏன் இந்தியாவிலேயே மும்பை, சென்னை, போன்ற பெருநகரங்களின் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்தும்அளவுக்கு வலுவான இனமாக நாம் இருக்கிறோம். இவ்வளவு இருந்தும் மற்ற சாதி அரசியல் வாதிகள் நம்மை ஏய்க்கிறார்கள். தமிழகத்திலும் மத்திய அரசிலும் ஒரு மந்திரி கூட பலம்மிக்க நாடான் மந்திரி இல்லை. வலைத்தளத்தை எடுத்துக்கொண்டால் சிலர் பொறாமையால் நம் சாதியாரை திட்டுகிறார்கள். ஈழத்தில் இருந்து பனை விளைவிக்க பனையேற அழைத்து வரப்பட்ட சாதிஎன வக்கணை பேசுகிறார்கள். இந்த நிலைமையில் நமது இளம் தலைமுறையினர் மற்ற தெலுங்கனையும், நடிகனையும் பூசை செய்து பால் அபிசேகம் நடத்துவதை விட்டுவிட்டு நமது இனத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் வகையில் முயலவேண்டும்.
நாடார்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்பது முற்றிலும் தவறான கருத்து. நாயக்க மன்னர்களால் அடித்து விரட்டப்பட்டவர்கள். அவர்களின் கொடுமை தாங்காமல் நாடார்கள் பட்ட அவலம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு நாட்டை வெல்லும் அரச வம்சம் தோல்வியடைந்தவர்களை என்ன செய்யும் என்பதை நாம் தற்போதைய ஈழத்தில் நடக்கும் சம்பவங்களில் இருந்தே புரிந்து கொள்ளலாம். சகோதர சண்டையால் பாண்டியர்கள் விஜயநகர அரசர்களை இங்கு இழுத்து வந்து அவர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர். தெலுங்கர்களாகிய உங்களை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று விடுதலை வேட்கையால் மறுத்த பாண்டியர்களும் அவர்கள் ஆதரவாளர்களான நாடார்களும் அவர்கள் இருந்த நிலையை விட்டு கீழாக்கப்பட்டனர். அவர்களிடம் யாரும் எந்த தொடர்பும் வைக்கக்கூடாது என்று அடக்கி ஒடுக்கப்பட்டனர். தெலுங்கர்களை ஆதரித்த தமிழர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் பாளையக்காரர்கள் ஆக்கப்பட்டனர். அவர்களுடன் மற்ற தெலுங்கு பாளையங்களும் இணைந்து நாயக்கர் ஆட்சியில் மலர்ச்சியுற்றன. நாடார் இனம் ஓட ஓட விரட்டப்பட்டது. அவர்களிடம் சமாதானம் செய்து தெலுங்கர்களை சகித்துக்கொண்ட தமிழ் சாதிகளை அவர்கள் வசதிக்கேற்ப சேனாதிபதிகளாகவோ, மந்திரிகளாகவோ, ஊழியர்களாகவோ வைத்துக்கொண்டனர். மற்ற அனைவரையும் அடித்து விரட்டினர். தற்போது எப்படி ஈழத்தில் கருணா கும்பலுக்கு வாழ்வு கிடைத்ததோ அப்படி தமிழகத்தில் தெலுங்கர்களை ஆதரித்த தமிழர்கள் நல்வாழ்வு பெற்றனர். மக்களாட்சி நிகழும் காலத்திலேயே இவ்வளவு கொடுமைகள் என்றால் அந்த காலத்தை சிந்தித்துப்பாருங்கள். கொற்கை மண்டலத்தில் இருந்த நாடார் கிராமங்கள் அனைத்தும் சிதறடிக்கப்பட்டன. நில உடைமையாளர்களாக இருந்த வர்கள் நிலங்கள் அனைத்தும் ஆற்றுப்பாசன நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்கள் தேரி வனாந்திரத்துக்குள் துரத்தியடிக்கப்பட்டனர். அவர்களின் செந்தூர் கோவிலும் மற்ற கோவில்களும் பறித்துக்கொள்ளப்பட்டு அவர்கள் நுழைய கட்டியிருந்த மேற்கு வாசல் அடைக்கப்பட்டது. அவர்களின் நல்ல நிலங்கள் அனைத்தும் தெலுங்கர்களுக்கும் அவர்களை ஆதரித்த மற்ற சாதியினருக்கும் வழங்கப்பட்டன. அவர்கள் முருகனுக்கு கோவில் கட்டி வழிபட்டு வந்தது எல்லாவற்றையும் மறைத்து அது அய்யன் கோவில் என வழிபடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குரும்பூர் நாட்டில் இந்த கொடுமை அதிகம் இருந்தது. கட்டபொம்மன் என்ற தெலுங்கு கொள்ளையன் ஆட்சியில் ஆங்கிலேயர்கள் வசம் இருந்த ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர் தாலுகாக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அங்கு உள்ள நாடார்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கர்களை ஆதரித்த தமிழ் சாதிகளை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. திருவைகுண்டத்தில் 12 மறவர்களை கொலை செய்து நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டனர். குரும்பூரை ஆண்ட நாடார்கள் அனைவரும் காட்டுக்குள் விரட்டப்பட்டனர். சுண்டங்கோட்டை, மேலப்புதுக்குடி ஊரைச்சேர்ந்தவர்கள் குரும்பூரில் இருந்து விரட்டப்பட்டவர்கதான். அவர்கள் கோவிலான ஆதிநாராயண பெருமாள் கோவிலில் நுழைய அவர்கள் தடுக்கப்பட்டனர். காயாமொழி ஆதித்தர்களுடன் கட்டபொம்மன் போர் செய்தான். திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர்கள் சமாதானம் செய்துவைத்தனர். நட்டாத்தி ஜமீன்தார் மட்டும் கட்டபொம்மனுடன் சமரசம் செய்து கொண்டதால் அவரை விட்டு விட்டு மற்ற அனைத்து நாடார் ஊர்களையும் தெலுங்கர்கள் தங்கள் வசப்படுத்திக்கொண்டனர். இதன் காரணமாக நாடார்கள் நட்டாத்தியர்களை தங்கள் சாதியில் இருந்தே புறக்கணிக்கும் நிலை வந்தது. இவ்வளவு கொடுமைகள் நடந்ததால் பலர் நாடார்கள் என்ற பெயரை மறைத்து வேறு சாதி பெயரைக்கூட சொன்னதாக வரலாறு உண்டு 5 வருடம் ஆட்சி மாறும் போதே அடுத்த கட்சி ஆட்சியை தாங்க முடியாமல் கரை வேட்டியை மாற்றி கட்டும் இந்த காலத்தில் 800 வருடங்களாக நாடார்கள் பட்ட அவலத்தை சிந்தித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாடார்கள் ஈழத்துக்கு செல்ல வாய்ப்பு இருந்து இருக்கலாம். மற்றபடி பனைவிதையை எடுத் து இங்கு வந்தார்கள் என்ற தகவல் ஆங்கில அதிகாரிகளின் அறைகுறை ஆராய்ச்சி முடிவாகும். சாதாரணமாக சிந்தித்துப்பார்த்தாலே புரியும் ஒரு பனை வளர்ந்து பலன் தர குறைந்தது 20 வருடம் ஆகும் யாராவது அதுவரை பனையை வளர்த்து அதன் பலனில் மட்டுமே காலம் கழிக்க முடியுமா? அவர்கள் சோற்றுக்கு எதை தின்பார்கள்? ஏற்கனவே தேரிக்காட்டுக்குள் இயற்கையாக இருந்த பனைமரங்களைத்தான் அவர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும். அல்லது முன்பு அங்கு இருந்த சமூகத்தினருடன் சேர்ந்து தெலுங்கர்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்து கொண்டு தாங்களும் பனையேறி என்று வாழ்ந்து இருக்க வேண்டும். இதுதான் நடந்தது. பனை இந்தியாவில் 10 ஆயிரம் வரலாறு கொண்ட மரம்.
மகாபாரத்தில் வரும் பீஷ்மர் சிறந்த நீதிமான் பெருந்தலைவர் காமராஜரைப்போல அவரும் திருமணம் ஆகாமல் நாட்டுக்காக உழைத்தவர் அவருடைய கொடியில் இருந்த சின்னம் பனைமரம், இந்திய பட்டாளத்தின் மதராஸ் ரெஜிமென்டின் ஒரு படைப்பிரிவு பல்மேரா அதன் சின்னம் தங்கப்பனை, சேர மன்னர்களின் மாலை பனம்பூமாலை இப்படி பல்வேறு புகழ்களுடன் நாடார்குல சின்னமாக விளங்கும் பனையை ஏதோ இலங்கையில் இருந்துதான் இந்தியாவுக்கு கொண்டு வந்து கொட்டை போட்டு முளைக்கவைத்தனர் என்ற வீண் கற்பனையை 2 ஆங்கில மடையர்கள் எழுதினார்கள் என்பதற்காக இந்தியாவில் தெலுங்கர்கள் வருகைக்கு முன்பு பனையே இல்லை என்று தமிழர்கள் நினைத்து விடக்கூடாது. நாடார்களின் மீது தெலுங்கர்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைக்கு இன்னும் ஏராளமான தகவல்கள் உள்ளன

வீரபாண்டிய கட்டபொம்மன் திரை படத்தை பார்த்துவிட்டு அந்த மாயை அகலாதொருக்கு இதெல்லாம் அதிர்ச்சி செய்தியே !!

வீரபாண்டிய கட்டபொம்மன் திரை படத்தை பார்த்துவிட்டு அந்த மாயை அகலாதொருக்கு இதெல்லாம் அதிர்ச்சி செய்தியே !!

கெட்டி பொம்மு நாயக்கன் பாஞ்சால குறிச்சியில் ஒரு பாளையகாரனாக ஆட்சி செய்து மக்களோடு சேர்ந்து இந்திய விடுதலை போராட்டத்தை முதலில் துவங்கினான் என்றும் , அவன் வெள்ளையருக்கு எதிராக போர் புரிந்தான் என்றும் இன்று வரை பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது . வந்தேறிகளின் வரலாற்றை மட்டுமே படித்து வந்த நாம், நமது வரலாற்றை இழந்து நிற்பது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்தது அல்ல . நமது உரிமைகளையும் உடமைகளையும் இழந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டது திட்டமிட்ட செயல் ஆகும்.புதிய வந்தேறிகளான ஆற்காட்டு நவாபிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமை பெற்ற வெள்ளைகரனுக்கும் பழைய வடுக வந்தேறியான கெட்டி பொம்மு நாயக்கனுக்கும் இடையே தென் தமிழ் நாட்டு பகுதியில் வரி வசூல் கொள்ளை சம்பந்தமாக நடந்த பூசல் எப்படி சுதந்திரபோர் அல்லது போராட்டமாகும்
இந்த கெட்டி பொம்முவின் முன்னோரான ஜெகவீர கெட்டி பொம்மு பாளையக்காரன் ஆனதே குறுக்கு வழியில்தான் . முதலில் கிழக்கிந்திய கம்பெனியோடு சேர்ந்துகொண்டு வரி வசூல் செய்த கெட்டி பொம்மு பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியோடு ஏற்பட்ட முரண் பாடு காரணமாக கம்பெனிக்கு திரை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின் மீது அடிக்கடி சண்டையிட்டு பொது மக்களை சூறையாடினான் . அவன் தன் குடிமக்களிடமே அதிக வரிகளை வர்புரிதிப் பெற்றான், கம்பெனிக்கு துணிகள் நெய்து வழங்கி வந்த நெசவாளர்களை துன்புறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தான், அவர்களை சாட்டையால் அடித்தும், கை கால்களை கட்டிவைத்து அட்டை பூசிகளை கடிக்க விட்டும் கொடுமை செய்தான் . கெட்டி பொம்முவின் கையாட்கள் நெசவாளர்களின் வீடுகளை கொள்ளையிட்டு அவர்களின் பெண்களின் வாயில் மண்ணை கொட்டியும், நெசவாளர்களின் கண்களில் கள்ளி பாலை ஊற்றியும் கொடுமை படுத்தினர் . பலருடைய பற்கள் அடித்து நொறுக்க பட்டதுடன் செருப்படியும், சாட்டையடியும் வழங்கப்பட்டது.

ஆனால் கெட்டி பொம்மு ஆங்கிலேயரை எதிர்த்து போராடினான் என்றும் அவனே முதல் சுதந்திர வீரன்போல பொய்யுரை பரப்புகின்றன மேலும் கெட்டி பொம்மு திருசெந்தூரில் தீப ஆராதனை மணி அடிப்பதை பாஞ்சால குறிச்சியில் கேட்பதற்காக வழி நெடுக மணி மண்டபங்கள் கட்டிவைத்தான் . அவைகள் கற்களால் அல்ல வெறும் ஓலை குடிசைகளே ! அவைகள் கட்டபட்டதிலும் தமிழர்களே பாதிக்கப்பட்டனர். ஏனெனில் நாயக்கர்களால் விரட்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வாழ்ந்த நாடார் மக்களின் பனை ஓலைகளையும் , மரங்களையும் யாரையும் கேட்காமல் வெட்டி கொண்டு வந்தனர் . இதனால் பனை மரத்தை ஆதாராமாக கொண்டு வாழ்க்கை நடத்திய நாடார் சாதி மக்கள் வெறுப்படைந்தனர் . ஒரு முறை கெட்டி பொம்முவின் கையாட்களுக்கும் குரும்பூர் நாடார்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இதனால் நாடார் சாதி மக்கள் ஒருபோதும் அவனை ஆதரித்தது இல்லை.
இப்படிப்பட்ட கெட்டிபொம்முவை சுதந்திர போராட்ட வீரன் என்று வரலாறை மாற்றினர்
 

Sunday, March 24, 2013

அனைவரும் ஒன்று சேரவேண்டிய கட்டாயம்

நாடார் சமுதாய சிந்தனையாளர்கள் 
அனைவரும் ஒன்று சேரவேண்டிய கட்டாயம் 

படித்த நாடார் ஒன்றாகணும் 
பாமர நாடாரை விளிப்பாக்கணும் 
பணக்கார நாடார் ஒன்றாகணும்
பாமர ஏழையை வளமாக்கணும்

அமைப்பு நாடார் ஒன்றாகணும்
ஒரே நாடார் அமைப்பாகனும்
காட்சிகளில் நாடார் ஒன்றாகணும்
தனி நாடார் கட்சி அமைப்பாகனும்

சிதறி கிடக்கும் நாடார் தலைவர்கள்
சிதங்கா நாடார் அமைப்பாகனும்
சிந்திக்கும் நாடார் தலைவர்கள்
சிந்தித்து நாடாரை வழிநடத்தணும்


உங்கள்
மதகைபிரபு நாடார் 

ஒரு அதிர்ச்சியான உண்மை நாடார் இளைஞர்களே சிந்திக்கவும்



நம் நாடார் சமுதாய வளர்ச்சி பணத்தின் வளர்ச்சி மட்டுமல்ல என்பதை நாம் அறிவது நல்லது. இச்சமுதாய மக்கள் எத்தனை பேர் அரசு நிர்வாகத்துறையில் உயர் பதவிகளில் உள்ளனர் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால்தன் சமுதாயம் வளர்ந்துள்ளதா?அல்லது பின்தங்கியுள்ளதா என்று துல்லியமாகக்காண முடியும்.அரசில் நாம் மக்கள் தொகையில் 20% உள்ளோம் அனைத்துத் துறைகளிலும் குறைந்தது 20 விழுக்காடு பதவிகளில் நம்மவர்கள் இருந்திருக்க வேண்டும். அதற்கு மேலும் நம்மவர்கள் இருந்தால்தான் நாம் வளர்ந்துள்ளோம் என்று பொருள். தற்போதைய நிலைமையை கணக்கிட்டுப் பார்த்தால் 5% பதவிகளில் கூட நம்மவர்கள் இல்லாததையே காணலாம். தமிழ்நாடு சட்மன்றத்தில் கூட நம்மவர்கள் சுமார் 47 பேராவது இருந்திருக்க வேண்டும். ஆனால் எத்தனை நாடார் M.L.A க்கள் உள்ளனர். வெறும் சிலபேர்கள் மட்டும் உள்ளனர். நமது பங்கைக் கூட கேட்பதற்கு வக்கில்லாத நாடார்களாகதான் இருக்கிறோம் பிராமண சமுதாயத்தில் பல உட்பிரிவுகள் உண்டு. நம்பூதிரிப் பிராமணன், ஐயர், ஐயங்கார், போற்றி, பட்டர் மற்றும் கோபாத பிராமணன், ஷடபாத பிராமணன், தைத்திரிய பிராமணன் போன்ற பிரிவுகள் உண்டு. ஆனால் பிராமண சமுதாயம் என்று வரும்போது இவர்கள் அனைவரும் ஒருமுகமாக நின்று செயல்படுகிறார்கள். அதனால், மக்கள் தொகையில் வெறும் 2 % வருகின்ற இவர்கள் அனைத்து பதவிகளிலும் முதல் நிலையில் இருக்கிறார்கள். சமுதாய வளர்ச்சிக்காக ஒட்டுமொத்தமாக அவர்கள் ஒருங்கிணைந்து சேவை செய்வதால்தான் அந்த வளர்ச்சி நிலையை எட்டினர். அவர்கள் என்றாவது முற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வர வேண்டும் என்று விரும்புகிறார்களா? இல்லை ஆனால் நாம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தாருங்கள் என்று கேட்பதிலிருந்தே தெரியவில்லையா நாம் சமுதாய அளவில் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பதைத்தானே வெளிப்படுத்துகிறது. இது குறித்து ஆய்வு செய்து, சிந்தித்து சமுதாயம் வளர்ச்சி அடைவதற்கு உகந்த வழிமுறைகளை கண்டிப்பாக காணவேண்டிய கட்டாயம் உள்ளது

இதில் எதாவது தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்
இதில் ஏதாவது திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்


உங்கள்
மதகைபிரபு நாடார்

பச்சை தமிழர் தன்மான தமிழர் காமராஜர்

அமெரிக்காவின் அதிபராக நிக்ஸன் இருந்த நேரம்.அவர் இந்தியா வந்த போது காமராஜரை பார்க்க விரும்பினாராம்.காமராஜர் அப்போது நாகர்கோவில் எம்.பி.,யாய் இருந்ததால் தில்லியிலேயே இருந்தார்.ஆனாலும்..அவர் நிக்ஸனை சந்திக்க விரும்பவில்லை.உதவியாளரோ'ஐயோ  உலகே பெருமைப்படும்..அமெரிக்க அதிபர் அவர்...என்றார்..

'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.

Wednesday, December 5, 2012

துபாய் மதகநேரி மக்கள் நலச்சங்கம்






பனைமரத்தை பணமாக்கிய நாடார்கள்



சாலை ஓரம் எல்லாம் பனை மரங்கள்
வானுயர்ந்து எழுந்து நிற்கும்
எழுச்சிமிக்க கிராமத்திலே
 
துணிச்சலுடன் நாடார் மரமேறி
குளிர்ச்சிமிக்க கள் இறக்கி
மகிழ்ச்சி கொண்ட காலம் அது..

ஆதவன் சங்கமிக்கும் பொழுதுகளில்
ஆடிப்பாடி கொண்டாட காத்திருக்கும்
மனசுகளின் ஊக்க மருந்து தேவைக்காய்
பல அடி உயரம் பக்குவமாய் ஏறி
சொட்டிச் சொட்டி நிறைந்திருக்கும்
பானைகளை இறக்கி தந்தாய் என் நாடார்

பனங்காற்று கொஞ்சம் களைப்பாற்றும்
பனங்கள்ளு கொஞ்சம் வீர மேற்றும்
நாடாரின் பொருளாதாரம் இப்பனை
நாடாரின் சொத்து இப்பனை

தனிப்பனைக்கள்ளு
தனி ருசி
பழங்கள்ளும் கருவாடும்
படு ருசி

நாடார்கள் இடுப்புபட்டி இறுகக் கட்டி
கத்தியும் முட்டியும் சொருகி
பாளைக்கயிற்றின் துணையோடு
பனையேறுவார் என் நாடார்

பசுவின் மடியில் காம்பெடுத்து
பால் கறப்பது போல்
பனையின் முடியில் வட்டெடுத்து
பனம்பால் கறப்பார் என் நாடார்

ஆப்பம் சுட ஆச்சிமாரும்
அலுப்பு தீர்க்க அப்புமாரும்
குதூகலிக்க குமரர்களும்
கள்ளுக்காக காத்திருப்பார்
அந்தக்காலம் இனிவருமா
பனைமரமே நீ சொல்லு

இன்று டாஸ்மாக் கடைகளில் காலை முதல் இரவுவரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கால் வலிக்க வரிசையில் நின்று வாங்கி குடித்து பணத்தையும் அழித்து ,உடம்பையும் கெடுத்து ,குடும்பத்தையும் சீரழித்து ,கலாச்சாரத்தையும் மாற்றி வருகிறார்கள்

உங்கள்
R.மதகைபிரபு நாடார்

நாடார் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா





தென்தமிழகத்தைத் பூர்வீக குடிகளாகக் கொண்ட நாடார் சமுதாய மக்கள். உலக அளவில் முத்து வியாபாரத்தை செய்துவந்து பெருமை கொண்டவர்கள். நீதிமான் பனையைப் போல் செழித்து வளருவான் என்ற திருமறையின் கருத்துக்கிணங்க தங்களை நீதிமான்களாக வளர்த்துக் கொண்டவர்கள் நாடார் சமுதாய மக்கள். "நாடார்" என்பதே நாட்டை ஆண்டவர்கள் என்ற கருத்தில் விரிவடைந்த வார்த்தையாகும். ஆம், நாடார்
சமுதாய மக்கள் 16,17 ஆம் நூன்றாண்டில் உலகின் சிறப்பு பெற்ற முத்து வியாபாரிகள். 18ம் நூற்றாண்டு, அவர்களை அரச குலமாக்கியது. பாண்டியர் வம்ச இனத்தின் கிளை வேராக தன்னை உட்படுத்தி நாட்டை ஆண்டவர்கள் நாடார்கள். தாய் தமிழகத்தின் மண்ணின் பூர்வீக மைந்தர்கள் என்ற பெருமை வாய்ந்தவர்கள் நாடார்கள் தங்களின் படைத் தளபதிகள், பிற மாநில சமுதாயத்தவர் படையெடுப்பு, ஆங்கிலேய ஆதிக்க நெருக்கம் இவைகளால் தங்கள் நாட்டுரிமையை இழந்து, மண்ணின் மைந்தர்கள் சிதறடிக்கப்பட்டார்கள் தங்கள் இனத்தைக் காக்கும் முயற்சியில், இந்தியா வெங்கும் பல்கிப்பெருகி பல காரணப் பெயர்களில் சுற்றித் திரிந்தார்கள். பிற சமுதாய உதவிகள் அற்ற முறையில் தங்கள் சமுதாயத்தை வளர்த்துக் கொண்டு பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள் அப்போது, மன்னர் ஆட்சி மறைந்து மக்கள் ஆட்சி செங்கோல் ஊன்றி நின்றது.
இந்த காலக்கட்டத்தில் தான் நாடார்கள் தங்களை வியாபாரிகளாய் தனி முத்திரை பதிக்க முயன்று வெற்றியும் பெற்றார்கள். இன்றைக்கு தமிழகத்தின் வியாபார சமுதாயமாக /உழைக்கும் வர்க்கமாக தன்னை அடையாளம் காட்டி வருவது நாடார் சமுதாயம். இந்தியாவில் எந்த மாநிலம் சென்றாலும் தங்கள் சமுதாய விஸ்தரிப்பை அருமையாக செய்து வருகிறவர்கள் நாடார் சமுதாய மக்கள். நாடார், சாணார், சான்றோர் குலம் என தமிழகத்திலும், இன்னும் பல மாநிலங்களிலும் நாடார் சமுதாயம் பரவி இருக்கிறது.

அரசியலிலும் ஆன்மீகத்திலும் நாடார் சமுதாய மக்களின் பங்கு முத்திரை பதிக்க ஏதாவது இருந்து வருகிறது. அரசியலும், ஆன்மீக வழி காட்டலிலும் சமுதாய விழிப்புணர்வையும் பொது நல சேவையை உள்ளடக்கிய ஒரு தொண்டுள்ளத்தை, நல்ல பல கருத்துகளைச் சொல்லி வருபவர்கள் நாடார் சமுதாய மக்கள். கலை, இலக்கியம் பணிகளிலும் நாடார் சமுதாய மக்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். தமிழகம், ஏன் இந்திய அரசியலிலேயே திரும்பி பார்க்கவும், நின்று சல்யூட் அடிக்கவும் வைத்தவர் பெருந்தலைவர், கிங்மேக்கர், பாரதரத்னா கு .காமராஜர் அவர்கள். காமராஜர் அவர்களின் எளிமை, புத்திக் கூர்மை, நாட்டு வளர்ச்சிக்கான சிந்தனை - இன்றைக்கும் அனைத்து தரப்பு அரசியல் வாதிகளை பாராட்ட வைப்பதாக இருக்கிறது புதிய அரசியல் கல்வியின், அரிச்சுவடு அவரின் பொது வாழ்வு என போற்ற கூடியதாக இன்றும், என்றும் இருந்து வரும். தொழிற்துறை வளர்ச்சியில் நாடார் சமுதாய மக்களின் பங்கு, அந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே ஒருங்கிணைப்பு சங்கங்கள் மூலமாக தொழிற்பேட்டைகளை அமைத்து வணிகத்திற்கு வாய்ப்பு அளித்தவர்கள் நாடார்கள் இன்றைக்கு கம்பீரமாக பல பல கிளைகளோடு அதுவும் சொந்தக் கட்டிடத்திலேயே நாடார் வங்கியாகச் செயல்பட்டுவருகிற "தமிழ்நாடு மெர்கண்டைல்ஸ் பேங்க் "மாபெரும் அடையாளச் சின்னம் சங்க அமைப்புகள் மூலம் திறமையான கல்வி ஸ்தாபனங்கள் ,மருத்துவமனைகள் தொழிற் வளர்ச்சி ஆலோசனை நிறுவனங்கள் சிறு தொழிற் வளாகங்கள் லாட்ஜ் பொழுதுபோக்கு நிறுவனங்கள் சிறிய பெரிய முதலீட்டில் தொழிற் கடனுதவியோடு கூடிய வங்கிகள் ...என பற்பல சமுதாய வளர்ச்சித்தொண்டுகள் பரவி நிற்கிறது

உங்கள்
R.மதகைபிரபு நாடார்

Tuesday, July 31, 2012

தமிழ் நாட்டை அச்சுறுத்தும் மலையாளிகள் நாடாரை மிரட்டும் மலயாளவியாபாரிகள்

இன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில் தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது.

மணல் கொள்ளை முல்லைப் பெரியாறு:

முல்லைப் பெரியாறு அனிச் சிக்கலில் தொடர்ந்து நமக்கு தொல்லைகள் கொடுத்து வரும் மலையாளிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினையும் மதிக்காமல் புதிய அணைகட்ட தீர்மானித்துள்ளனர்.

புதிய ஆணை கட்டப்படுமானால் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்குள்ள 999 ஆண்டு ஒப்பந்தம் செல்லாததாகிவிடும். இந்த உண்மை கேரள அரசுக்கும், தமிழக அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், மன்மோகன் சிங், சோனியாவிற்கும் நன்றாகத் தெரியும்.

ஆனால் பாதிப்பைக் கண்டு பதைபதைக்க வேண்டிய முன்னாள் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதிக் காலம் கழித்துக் கொண்டிருந்தார். புதிய அணைக்கட்ட தமிழக ஆறுகளிலிருந்து நாற்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் யூனிட் அளவு மணல் கொள்ளையடிக்கப்பட்டு கேரள வனப் பகுதியில் குவிக்கப்பட்டு வருகின்றது .(ஒரு லாரியில் ஒன்றரை யூனிட் மணல் நிரப்பலாம்))

நிலம் கைப்பற்றுதல்: 

தமிழக கேரள எல்லை மாவட்டங்களான நீலமலை, கோவை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி என ஏழு மாவட்டங்களின் எல்லைப் பகுதியிலிருந்து தமிழகத்தினுள் நூறு கி.மீ. அளவிற்கு உள்ளே நுழைந்து நிலங்களை வாங்கியுள்ளனர் மலையாளிகள். வளைகுடா நாடுகளில் பெரும்பணம் சம்பாதிக்கும் மலையாளிகள் முதலீடு என்ற பெயரில் தமிழ்நாட்டில் நிலங்களை வளைத்துப்போட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களைவிட அதிகவிலை கொடுத்து மலையாளிகள் நிலங்களை வாங்குவதால் தமிழர்கள் மலையாளிகளிடம் நிலத்தை விற்றுவிட்டு வெளியேறுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பில் இன்று 8இல் 1 பகுதி மலையாளிகளின் கையில் உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எல்லையோர மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் பல இடங்களிலும் இடத்தை வளைத்துப் போடுவதில் குறியாக இருக்கின்றனர். நீலமலை, நெல்லை மாவட்டங்களில் உள்ள தமிழக வனத்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டி கப்பல் மூலம் சப்பான், கொரியா போன்ற நாடுகளுக்குக் கடத்தும் தொழிலையும் பகிரங்கமாகச் செய்து வாருகிறார்கள்.

நகை வணிகம்: 

ஐம்பது, அறுபது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மார்வாடிகள் நகை வணிகம், வட்டிக் கடை நடத்தி வந்தாலும் ஒரே பெயரில் தமிழ்நாடு முழுவதும் கடைகள் திறந்து கிளை பரப்பவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நகை வணிகத்தில் நுழைந்த மலையாளிகள் இன்று ஜோஸ் ஆலூக்காஸ், ஜோய் ஆலூக்காஸ், மனப்புரம் கோல்டு ஹௌஸ் என நூற்றுக்கணக்கான கிளைகளைப் பரப்பிவிட்டார்கள். இந்த நகைக்கடைகளில் கண்ணாடிக் கதவை திறந்து விடுபவன் தொடங்கி கல்லாப் பெட்டியில் இருப்பவன் வரை மலையாளிகளே.

நகைக்கடை என்றால் 10 அல்லது 15 அளவில் கடைகள் என்று நினைத்து விட வவேண்டாம். ஐந்தடுக்கு மாடிகள், நூற்றுக்கணக்கான மலையாள ஊழியர்கள், குளிரூட்டப்பட்ட அறைகள் என விரிந்து கிடக்கின்றன. மார்வாடிகளால் தமிழர்களின் நகைத்தொழில் நசிந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சோக வரலாற்று நிகழ்வின் வலி ஆறும் முன்பே மலையாளிகளின் ஆதிக்கத்தால் தமிழக நகை வணிகர்களும் தொழிலாளர்களும் நடுத்தெருவிற்கு வரவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதில் வேதனையும் வேடிக்கையும் என்னவென்றால் அண்மையில் ஜோஸ் ஆலுக்காசின் கிளைத் திறப்புவிழா கடலூரில் நடந்தது. கடையைத் திறந்து வைத்தவர் யார் தெரியுமா? தமிழக மக்கள் நல வாழ்வுத் துறை அமைச்சராயிருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். தமிழர்களின் நகரமான பெங்களூரில் அண்மையில் திறந்தவர் நடிகர் விசய். மலையாளிகள் நம்மீது ஆதிக்கம் செலுத்தும் கமுக்கம் தெரிகிறதா?

வியாபாரம்

தமிழ் நாட்டில் வியாபாரத்துக்கு செட்டியார்க்கு அடுத்தபடியாக நாடார்கள் சிறு வியாபாரங்கள் முதல் பல பெரிய வியாபாரங்கள் வரை நாடார்கள் மிகசிறந்து விலங்குகிறார்கள் ஆனால் இப்போ அது தலைகீழாக மாறிக்கொண்டுவருகிறது இப்போ மலையாளிகள் வியாபாரத்தில் கவர்ச்சியை காட்டி அரேபியா பணத்தை கொட்டி வியாபாரம் பண்ணுகிறான் வியாபாரத்தில் தமிழர்களை அடிமையாக்கி நாடார்களை மிரட்டுகிறான் மலையாளி 

முத்தூட் பைனான்ஸ்:

மலையாளிகளால் சில ஆண்டுகளுக்கு முன் சென்னை, மதுரை போன்ற மாநகரங்களில் மட்டும் முத்தூட் பைனான்ஸ் தொடங்கப்பட்டது.

பிறகு குறைவான வட்டி, நகைக் கிராமிற்கு அதிக பணம், நாள் கணக்கில் மட்டுமே கணக்கிடப்படும் வட்டித்தொகை என தமிழக மக்களிடம் கவர்ச்சி காட்டி நகராட்சி தகுதியுள்ள தமிழக நகரங்களில் தமது வட்டிக்கடையை விரிவாக்கம் செய்த முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தினர் இன்று ஐந்தாயிரம், பத்தாயிரம் மக்கள் தொகை கொண்ட சிற்றூர் பகுதிகளில் கூட தனது கிளையைத் தொடங்கி வட்டிக்கடை என்ற பெயரில் தமிழர்களின் சொத்துக்களை ஏமாற்றி பறித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட முத்தூட் பைனான்ஸ் கிளைகள் தமிழகத்தில் வேர்பிடித்து வளர்ந்து வரும் பேராபத்தை புரியாமல் மலையாளிகளிடம் நகைகளை அடகு வைத்து மனை வாங்கும் தமிழர்கள் பின் வீட்டை விற்று வட்டி கட்டி நடுத்தெருவிற்கு வருகிறார்கள்.

கட்டுமானத் தொழிலிலும் கைவரிசை:

அரை கிரவுண்ட், ஒரு கிரவுண்ட் அளவில் வீடு கட்டிக் கொடுப்பதை நாம் பெருமையாக பீற்றிக் கொள்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் இன்று பெருமளவில் மதிப்பிடக்கூடிய கட்டிடங்களைக் கட்டும் தொழில் மலையாளிகளின் கைகளில் சிக்கியுள்ளன. தமிழகக் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ஏக்கர் கணக்கிலான பெரிய பெரிய பங்களாக்கள், மாளிகைகளை தமிழ்நாட்டில் எழுப்பிக் கொண்டிருக்கும் பென்னிகுரியாகோஸ் என்ற மலையாளியின் கையில்தான் இன்று கட்டுமானத்துறை உள்ளது.

தமிழகத்திலுள்ள பாரம்பரியமான செட்டி நாடு வீடுகளை எல்லாம் வாஸ்து சரியல்ல என்று இடித்து, அதில் உள்ள பொருட்களை எல்லாம் கொள்ளையடித்து தமிழகக் கட்டிடக் கலைகளைச் சிதைத்து மலையாள கட்டிடக் கலைகளைப் புகுத்திக் கொண்டிருக்கிறார் பென்னி குரியகோஸ்.

இவரது ஆண்டு வருமானம் 500 கோடியைத் தாண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதே போல் ஆண்டுக்கு பலநூறு கோடிகளை ஊதியமாக (இலாபமாக) ஈட்டும் எம்.ஆர்.எப் டயர் நிறுவனமும் மலையாளிகளிகளுடையதுதான்.

பண்பாட்டுப் படையெடுப்பு:

தமிழகத்தில் மார்வாடிகளின் ஹோலிப் பண்டிகையைவிட இன்று பிரபலமாகிக் கொண்டிருக்கின்றது மலையாளிகளின் பண்டிகையான ஓணம்.

தெலுங்கு வருடப் பிறப்பிற்கு விடுமுறை விட்டு அண்டை மாநிலத்துடன் நட்பை வளர்ப்பதுபோல் கேரளத்துடனும் நட்போடு இருக்க வேண்டாமா? இதற்காக தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஓணம் திருவிழாவிற்காக மதுரை, நெல்லை, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, நாகர்கோவில், குமரி என பதினைந்திற்கும் மேற்பட்ட நகரங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்தார்.

இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மலையாளிகள் தமிழகப் பள்ளி கல்லூரிகளில் மலையாளப் பண்பாட்டின் பெருமைகளையும், உள்ளூர் தொலைக்காட்சிகளை ஒரு நாள் குத்தகைக்கு எடுத்து ஓணம் பண்டிகையின் சிறப்பையும் பரப்புகிறார்கள். இதேபோல கதகளிக்கும் தமிழகத்தில் அண்மைக் காலமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

விளம்பரப் படங்களில்கூட கதகளி இடம் பெரும் அளவிற்கு இன்று நம்மிடையே மலயாளப் பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்து வருகின்றது.

செண்டா மேளம் :

மாவீரன் முத்துக்குமார் தீக்குளித்து மாண்ட நாளில் மதுரையில் மு.க. அழகிரி தனது பிறந்த நாளை கிடாவும், கேக்கும் வெட்டிக் கொண்டாடினார் என்பது தெரிந்த கதைதான்.

மேலும் அன்றையச் சிறப்பாக கேரளத்திலிருந்து செண்டா மேளக் குழுவினர் வரவழைக்கப்பட்டு ஆட்டம் பாட்டம் போட்டு ஆனந்தத்தில் மூழ்கித் திளைத்தார்கள்.

கேரளத்தில் மட்டுமே பிரபலமடைந்திருந்த செண்டா மேளத்தை தமிழகத்திற்கு அழைத்து வந்து அறிமுகப் படுத்தியது மு.க. அழகிரிதான். இன்று மேல்தட்டு வர்க்கத்தினர் மற்றும் அரசியல் பிரமுகர்களின் இல்ல விழாக்களில் செண்டா மேளக் குழுவினர் தவறாமல் இடம் பெறுகிறார்கள் என்றால் அதற்கு மு.க. அழகிரியே முழுமுதல் காரணமாவார்.

ஐயப்பன் கோவிலுக்குச் செல்பவர்கள் கண்ணிபூசை நடத்தும் போதுகூட இன்று செண்டா மேளம் இடம் பிடித்துக் கொள்ளும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்று வருகின்றது. மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் அரசு விழாக்களில்கூட செண்டா மேள இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதன் உச்சகட்டமாக திமுக அரசு நடத்திய செம்மொழி மாநாட்டிலும் செண்டா மேளக் கச்சேரி இடம் பெற்றது. செம்மொழி மாநாட்டுப் பாடலை இயக்கியவரும், பாடியவர்களில் பெரும்பாலானோரும் மலையாளிகளே.

வந்தேரிகளைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதில் தமிழர்களுக்கு நிகர் எவருமில்லை என்பதைத் தெரிந்து கொண்ட கேரள அரசு செண்டா மேளத்திற்கென பள்ளி கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் தொடங்கி இசைப்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றளித்து, அவர்களைத் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

முன்பெல்லாம் கேரளத்திலிருந்து செண்டா மேளக் குழுவினர் வந்து போனார்கள். தற்போது தமிழ்நாட்டிலேயே தங்கிவிட்டார்கள். இதனால் நமது பாரம்பரிய இசைக் கலைஞர்களின் வாழ்வில் இருள் சூழும் நிலை தோன்றியுள்ளது.

சூழல் கேடுகள்:

தமிழ்நாட்டிலிருந்து மலையாளிகளுக்கு அரிசி, பருப்பு, பால், காய்கறி முதலான அத்தியாவசிய பொருட்களும், ஆடு, மாடு, கோழி, மீன் போன்ற இறைச்சி வகைகளும் செல்கின்றன. இதில் கோழியின் கழிவுப் பொருட்களையும், பிளாஸ்டிக் போன்ற திடக்கழிவுகளையும் மருந்துக் கழிவுகளையும் தமிழக எல்லையில் மலையாளிகள் கொட்டிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.

அவ்வப்போது உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தாலும் தடுக்க வேண்டிய தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

கோவை மாவட்டத்தில் கடலூர், போல்ல்லாச்சி, நடுப்பணி, கிணத்துக்கடவு, வளந்தாயமரம், கோபாலபுரம், செமணாம் பதி, மூணாறு போன்ற இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக கேரளக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

தமிழக எல்லைகளில் சோதனைச் சாவடிகள் இருந்தும் அதிகாரிகளின் மெத்தனத்தால் மலையாளிகள் தமிழகப் பகுதிகளில் கழிவுகளை கொட்டிச் செல்கிறார்கள்.

கடந்த 09 -07 -2010 அன்று பொள்ளாச்சியில் மருத்துவக் கழிவைக் கொட்டவந்த கேரள லாரியைத் தடுத்து நிறுத்திய பெரியார் திராவிடர் கழக பொள்ளாச்சி வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டார். கைது செய்தது கேரள காவல்துறையோ என்று அவசரப்பட்டு விடாதீர்கள். நம் தமிழக காவல்துறைதான். பின்னே அண்டை மாநில உறவை வலுப்படுத்த வேண்டாமா?

அரசியல் ஆதிக்கம்:

மத்திய அமைச்சரவையில் மகனுக்கும் பேரனுக்கும் வருமானம் வரும் துறையாக கேட்டுப் பெற்ற கலைஞரைவிடக் கேரளத்தவர்கள் வித்தியாசமானவர்கள்.

நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர ஏ.கே. அந்தோணி, வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் வயலார் ரவி, குடியேற்றத்துறை அமைச்சராக இருப்பவர் ஈ.அகமது எனத் தம் மாநில மக்களின் நலம் காக்கும் துறைகளைக் கேரளத்தவர்கள் பெற்றுள்ளார்கள்.

இந்தியாவில் உள்ள தேசிய இனங்களில் தமிழர்கள்தான் அதிக நாடுகளில் பரவி வாழ்கிறார்கள். கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்: வயலார் ரவி, அகமது போன்றோர் வகிக்கும் துறைகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெறாததற்குக் காரணம் அந்தத் துறைகளில் அதிகம் சுருட்ட முடியாது என்பதுதான். ஆனால் மலையாளிகளின் கணக்கு வேறு. இந்தத் துறைகளின் மூலம் தமது இனத்திற்கு எந்தவகையான பாதுகாப்பை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் உத்திரவாதப்படுத்தலாம், பொருளாதாரத்தைப் பெருக்கலாம் என்று எண்ணி செயல்படுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு.அப்பாஸ் அவர்கள் தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. பிரதமர் அலுவலகத்தில் குரூப்-௧ தேர்வெழுதி தேர்ச்சி பெற்று தற்போது பணிபுரிபவர்கள் 57 பேர். இதில் மலையாளிகள் மட்டும் 37 பேர். இதுமட்டுமல்ல வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த நிருபமா ராவ், பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன் மற்றும் எம்.கே.நாராயணன் (தற்போது மேற்கு வாங்க ஆளுநர்), பிரதமரின் ஆலோசகர் ஜோஷி, சோனியாவின் உச்சபட்ச ஆலோசகரான ஜார்ஜ், உள்துறைச் செயலாளர் கே.கி.பிள்ளை ஆகிய அனைவருமே மலையாளிகள் ஆவர். இந்தியாவில் மட்டுமல்லாது இந்தியாவிற்கான ஐ.நா. சிறப்புத் தூதுவராக கோபிநாத் அச்சங்குளங்கரே என்ற மலையாளியும், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் தனிச்செயலாளராக விஜய் நம்பியார் என்ற மலையாளியும் உள்ளனர். விஜய் நம்பியாரின் தமிபி மேஜர் ஜெனரல் சதீஷ் நம்பியார் இலங்கை ராணுவத்தினருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் பொறுப்பில் இருக்கிறார்.

நிர்வாகத்தின் கீழிலிருந்து மேலடுக்கு வரை எல்லாப் பொறுப்புகளிலும் மலையாளிகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது.

உண்மையில் மத்தியில் நடப்பது மன்மோகன் சோனியா ஆட்சி என்பதைவிட மலையாளிகளின் ஆட்சி என்பதுதான் பொருத்தமானதாகும். இவர்களின் சூழ்ச்சியால்தான் ஈழத்தில் நம் உறவுகள் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக இந்திய, அரசை ஆட்டிப்படைக்கும் அரசியல் சக்தியாக மலையாளிகள் திகழ்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கேரளத்தில் தமிழர்களின் நிலை:

தமிழ்நாட்டில் வசதி வாய்ப்புகளோடும், அரசியல் செல்வாக்கூடும் வாழும் மலையாளிகள் போல் கேரளத்தில் நம் தமிழர்கள் வாழ்கிறார்களா?

கடந்த ஆண்டு தமிழகத்தில் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை விட்டதுபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக திருவனந்தபுரம் நகரத்திற்கு மட்டும் ஒரு நாள் விடுப்பு கேட்டு கேரளா அரசிடம் திருவனந்தபுரத் தமிழர்கள் விண்ணப்பித்தார்கள்.

ஆனால் விடுமுறை கிடையாது என்று கேரளா அரசு அறிவித்தது. இதைக் கண்டித்து அங்குள்ள தமிழர்கள் கேரளத் தலைமைச் செயலகத்தின் முன் பொங்கல் வைக்கும் போராட்டத்தினை நடத்தி சிறை சென்றார்கள்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஒரு காலத்தில் கேரளாவில் பெரும் ஏலக்காய் எஸ்டேட் முதலாளிகளாக இருந்தவர்கள். இவர்களின் கதை பெரும் துயரம் நிறைந்தது. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியானாலும், கம்யூனிஸ்ட் ஆட்சியானாலும் இலக்கை ஈஸ்டேட்டிற்குச் சென்று ஒரு குறுக்கத்திற்கு ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மிரட்டி பணம் பறித்தார்கள். மலையாளிகளுக்கு அதிகக்கூலி கொடுத்து கட்டுப் படியாகாததால் விவசாய வேலைக்கு தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களை அடித்து விரட்டினார்கள்.

பிறகு முழுக்க முழுக்க மலையாளிகளையே வேலைக்குச் சேர்க்க வேண்டும் என்று மிரட்டினார்கள். இதனால் வந்த விலைக்கு நிலத்தை விற்று விட்டு மீண்டும் தமிழகத்திற்கே வந்து காலம் கழிக்கிறார்கள் நம் தமிழர்கள். மலையாளிகள் எந்த அளவிற்கு விழிப்புடனும் ஒரு கட்டுக்கோப்புடனும் திகழ்கிறார்கள் என்பதற்கு மேற்சொன்ன நிகழ்வுகள் எல்லாம் சின்னச் சின்ன எடுத்துக்காட்டுகள்தான்.

இதையெல்லாம் தடுத்து நிறுத்த ஒரு தற்காப்புப் போருக்காவது தமிழர்கள் தயாராக வேண்டாமா?

அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்திலேயே காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்புச் சட்டப்பிரிவான 370 கொண்டு வரப்பட்டது. அதன்படி காஷ்மீரில் பிரமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்க முடியாது.

அவரவர் தாய்மொழியில் வரவு செலவு கணக்கெழுதிக் கொள்ளலாம் என்ற சிறப்பு விதியும் வகுக்கப்பட்டது. இதன்படி இன்று தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் கடைகள் நடத்தி வரும் மார்வாடி, குஜராத்தி, மலையாளிகள் அவர்களின் தாய்மொழியிலேயே வரவு செலவுக் கணக்கு எழுதுவதால் நமது வருமான மற்றும் விற்பனை வரித்துறை அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

இதைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட வந்தேர்கள் விற்பனை வருமான வரித்துறையினரை ஏமாற்றி வருகின்றனர். அல்லது கையூட்டு (லஞ்சம்) கொடுத்து சரிகட்டுகின்றனர்.

இப்படி பிற மொழியினரின் பொருளாதார ஆதிக்கம் தமிழ் மண்ணில் வேர்பிடித்து நிற்பதை பிடுங்கி எறிய வேண்டுமானால் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட 1956க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறி சொத்து வாங்கியவர்களின் சொத்துக்கள் செல்லாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்தத் துணிச்சலான செயலைச் செய்ய முதுகெலும்புள்ள ஒரு முதலமைச்சரால் மட்டுமே முடியும்.

ஆசியாவில் சீனர்கள் வலிமை பெற்று திகழ்வதைப் போல இந்தியாவில் இன்று வலுவுள்ள இனக்குழுவாக மலையாள இனம் திகழ்கிறது. மலையாளிகளின் ஆதிக்கப் போக்கு தொடருமேயானால் விரைவில் தமிழகம் கேரளமயமாகிவிடும்.

தமிழர்கள் பொருளாதார அடிமைகளாய் இடம் பெயரக்கூடிய அபாயம் ஏற்படும். அல்லது யூதர்களிடம் நிலத்தைப் பரி கொடுத்துவிட்டு போராடிக் கொண்டிருக்கும் அராபிய இனத்தைப் போல தமிழினம் தள்ளப்பட்டுவிடும்.